Press "Enter" to skip to content

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ல் இருந்து 12 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உள்ளது.  நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

கொரோனா பாதித்த திண்டுக்கல்லை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதனை கரூர் ஆட்சியர் அன்பழகன் உறுதி செய்துள்ளார்.  அரசு விதிமுறைகளின்படி அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.  எனினும், இதுபற்றிய தகவலை தமிழக சுகாதார துறை அறிவிக்கவில்லை.

இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 11ல் இருந்து 12 ஆக உயர்ந்து உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »