அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 867 பேர் பலியாகினர். இதனால் அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
நியூயார்க்:
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 23 லட்சத்து 30 ஆயிரத்து 150 பேருக்கு பரவியுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 15 லட்சத்து 73 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 265 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 96 ஆயிரத்து 482 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 643 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 792 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 29 ஆயிரத்து 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 867 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த கொடிய வைரஸ் பரவியவர்களில் இதுவரை 68 ஆயிரத்து 269 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar