Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 6817 ஆக அதிகரிப்பு

மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,427 ஆக இருந்தது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »