Press "Enter" to skip to content

2 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை – மிரட்டும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது.

ஜெனீவா:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 28 லட்சத்து 96 ஆயிரத்து 952 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 18 லட்சத்து 69 ஆயிரத்து 801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 172 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 749 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

அமெரிக்கா – 53,266

ஸ்பெயின் – 22,902

இத்தாலி – 26,614

பிரான்ஸ் – 22,614

ஜெர்மனி – 5,819

இங்கிலாந்து – 20,319

துருக்கி -2,706

ஈரான் – 5,650

சீனா – 4,632

பிரேசில் – 3,762

பெல்ஜியம் – 6,917

கனடா – 2,462

நெதர்லாந்து – 4,409

சுவிஸ்சர்லாந்து – 1,599

அயர்லாந்து – 1,063

ஸ்வீடன் – 2,192

மெக்சிகோ – 1,221

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »