Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்…

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-

கோயம்புத்தூர் 141, திருப்பூர்- 112, திண்டுக்கல்-80, ஈரோடு- 70, மதுரை-79, திருநெல்வேலி-63, செங்கல்பட்டு -70, நாமக்கல் -61, தஞ்சாவூர்- 55, திருவள்ளூர் -53, திருச்சி-51, விழுப்புரம் – 48, நாகப்பட்டினம் – 44, தேனி -43, கரூர் -42, தென்காசி-38, விருதுநகர் -32, சேலம்- 31, ராணிப்பேட்டை -31, திருவாரூர் – 29, தூத்துக்குடி-27, கடலூர் -26, வேலூர் -22, திருப்பத்தூர் – 18, கன்னியாகுமரி-16, திருவண்ணாமலை- 15, ராமநாதபுரம் -15, சிவகங்கை -12, காஞ்சிபுரம் -20 நீலகிரி-9, பெரம்பலூர் -7, கள்ளக்குறிச்சி- 9, அரியலூர்-6, புதுக்கோட்டை-1, தர்மபுரி-1.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »