Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2526 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 28 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பரவியவர்களில் 1341 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »