பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 20,084 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 457 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar