டெல்லியில் மேலும் 349 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4898 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 ஆயிரத்து ஐநூறை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 349 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4898 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar