மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2127 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 37,136 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1325 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 2127 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 76 பேர் பலியாகினர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Source: Maalaimalar