Press "Enter" to skip to content

தமிழகத்தில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின் படி, மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 49 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 49 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 88 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 4 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 48 ஆயிரத்து 195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 79 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிதனைகளின் எண்ணிக்கை பாகிஸ்தான் (16,99,101), சிலி (13,88,319) போன்ற நாடுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »