Press "Enter" to skip to content

மெக்சிகோவை புரட்டி எடுக்கும் கொரோனா – ஒரு லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

மெக்சிகோ சிட்டி:

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13.50 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 11-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், மெக்சிகோவில் ஒரே நாளில் 576 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. 

மேலும் 4,472 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

7.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »