சென்னையில் உயர்ந்து வந்த ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை முதல்முறையாக 90 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 83.18 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுதும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, கல்லெண்ணெய், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று கல்லெண்ணெய், லிட்டர் 89.96 ரூபாய், டீசல் லிட்டர் 82.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கல்லெண்ணெய் விலை முதல்முறையாக 90 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி கல்லெண்ணெய் விலை இன்று 22 காசு உயர்ந்து லிட்டர் 90.18 ரூபாய்க்கும் , டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 83.18 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar