Press "Enter" to skip to content

அதிரும் அமெரிக்கா – பலி எண்ணிக்கை 5.25 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

வாஷிங்டன்:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
 
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,92,55,365 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,778 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.96 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »