Press "Enter" to skip to content

15 மாதங்களுக்கு பிறகு வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி

வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி:

1971ம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வங்காளதேசம் உருவானது. இதன் 50-வது ஆண்டு விழா வங்காள தேசத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 26-ம் தேதி வங்காளதேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோடி வெளிநாடு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா – மோடி பேச்சுக்குப் பின் இருவரும் தாஹா – மேற்கு வங்காளம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் தொடர் வண்டி சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »