தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார்.
சென்னை,:
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந்த ஆண்டு இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்தநிலையில் அவர், அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்காக கடந்த மாதம் 21-ந்தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சகாயம் ‘அரசியல் களம் காண்போம்’ என்று அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) புதிய கட்சியை தொடங்குகிறார். இதுகுறித்து அவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். அப்போது தனது கட்சி பெயரை அவர் அறிவிக்கிறார். மேலும் அவர், சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பது, மக்களுக்கான வாக்குறுதிகள் அளிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
[embedded content]
Source: Maalaimalar