உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரத்சிங் ராவத், ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றார்.
டேராடூன் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அடுத்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்-மந்திரியின் செயல்பாடுகளில் சக மந்திரிகள், பா.ஜ.க. தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையறிந்த கட்சித்தலைமை நடவடிக்கையில் இறங்கியது. பா.ஜ.க. துணைத்தலைவர் ராமன் சிங்கையும், பொதுச்செயலாளர் துஷ்யந்த் சிங் கவுதமையும் மேலிடம் அங்கு அனுப்பி, அறிக்கை பெற்றது. அதைத் தொடர்ந்து திரிவேந்திரசிங் ராவத் பதவி விலகுமாறு மேலிடம் அறிவுறுத்தியது. அதன்படி அவர் நேற்றுமுன்தினம் பதவி விலகினார்.
இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், டேராடூனில் நேற்று நடந்தது.
இதில் புதிய முதல்-மந்திரியாக திரத்சிங் ராவத் (வயது 56) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரத்சிங் ராவத், கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் சென்று ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் திரத் சிங் ராவத் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
அவர் பதவியேற்றுக்கொண்டதும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரத்சிங் ராவத், ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar