Press "Enter" to skip to content

மேற்கு வங்காளம், அசாமில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

ஐந்து மாநில தேர்தல்களில் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கொல்கத்தா:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இன்று (27-ம் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது அந்தக் கட்சியிடம் இருந்து பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

அங்கு முதல் கட்ட தேர்தல் 30 சட்டசபை தொகுதிகளில் இன்று (27-ம் தேதி) நடக்கிறது. 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 21 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

இதேபோல், அசாம் மாநிலத்தில் 126 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் இன்று (27-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி முடிகிறது.

இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைத் தொடர்வதற்காக போராடுகிறது. அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இங்கு இன்று 47 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. இவற்றில் 39 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணி கட்சியான அசாம் கணபரிஷத் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் 2 தொகுதிகளில் அசாம் கணபரிஷத், பா.ஜ.க.வுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த முதல் கட்ட தேர்தலில் 23 பெண் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »