Press "Enter" to skip to content

முதலமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்- ஆ.ராசா

எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல. பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

உதகை:

உதகையில் திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்.

* என் பேச்சால் முதலமைச்சர் கலங்கியதால் மன்னிப்பு கோருகிறேன்.

* எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு.

* முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

* என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என தீர்ப்பளிப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »