மிசோரம் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐசால்:
மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 அளவுகோலாகப் பதிவானது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar