தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகம் முழுவதுமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார்.
முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமும், மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும் பதிவாகின. அதன்பின் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவானது.
ஐந்து மணிக்குப்பிறகு 8.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar