Press "Enter" to skip to content

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை நிறுத்தும் விதமாக முள் தேங்காய் என்று அழைக்கப்படும் ஒரு வகை பனை மரங்களை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை நிறுத்தும் விதமாக முள் தேங்காய் என்று அழைக்கப்படும் ஒரு வகை பனை மரங்களை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தோட்ட நிறுவனங்கள் தங்கள் பனை மரங்களில் 10 சதவீதத்தை அகற்றி விட்டு ரப்பர் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களைப் பயிரிட உத்தரவிடப்பட்டுள்ளன‌.

இதன் மூலம் பனை சாகுபடி மற்றும் பாமாயில் நுகர்வை முழுமையாக நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »