வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
சென்னை:
வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நாளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் வி.வி.பாட் எந்திரம் வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்குச்சாவடியில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. 15 வாக்குகள் அதில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 92-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறப்பு படை, ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்கள். துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்படுகிறார்கள்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar