உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 கோடியைக் கடந்துள்ளது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.18 கோடியைத் தாண்டியது.
மேலும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar