Press "Enter" to skip to content

மெக்சிகோவில் பெருகும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியது

மெக்சிகோ நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.12 லட்சத்தைக் கடந்துள்ளது.

மெக்சிகோ சிட்டி:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் மெக்சிகோ 14-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2.12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து 18.29 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 2.63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »