Press "Enter" to skip to content

புதுச்சேரி சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா

கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் புதுச்சேரியில் தற்போது அதிகரித்துள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காலாப்பட்டு சிறை கைதிகளுக்கு சளி, மூச்சு திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 41 கைதிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 31 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 10 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »