Press "Enter" to skip to content

தமிழகத்துக்கு போதிய தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: 

அதில் அவர் கூறியுள்ளதாவது:-

தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்துக்கு உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். 

தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசி டோஸ் கேட்டிருந்த நிலையில் 42 லட்சம் தடுப்பூசி டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »