ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் ஒரே நாளில் 399 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மாஸ்கோ:
இதுவரை உலக அளவில் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 37 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 51,17,274 ஆக உள்ளது.
கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மேலும் 399 பேர் உயிரிழந்ததால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கொரோனா தொற்றில் இருந்து 47.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 2.64 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar