அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும் என்று மோகன் பகவத் கூறினார்.
கவுகாத்தி:
குடியுரிமை சட்டத்தால், முஸ்லிம்கள் எந்த பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி.) ஆகியவை அரசியல் காரணமாக சிலரால் பிரச்னையாக்கப்பட்டு வருகிறது. குடியுரிமைச் சட்டத்தால் எந்தவொரு முஸ்லிமும் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார். குடியுரிமைச் சட்டம் என்பது அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்கும்.
அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து துரத்தப்படும்போது, நாம் அடைக்கலம் கொடுத்தாக வேண்டும். அவர்களுக்கு இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாதுகாப்பு வழங்கும்” என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar