சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னரே அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கான அனுமதியைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar