பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
குவெட்டா:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்டத்தில் கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அந்த வாகனம் சபர் பாஷ் பகுதியருகே வந்தபோது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்.
தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாகச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த அதிகாரிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar