சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நாளை மற்றும் 19-ந்தேதி அன்று மூடப்பட வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயாராணி கூறியுள்ளார்.
சென்னை :
சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்டோபர் 2-ந் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியையொட்டியும், 19-ந் தேதி மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar