Press "Enter" to skip to content

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் மீண்டும் நியமனம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரை அரசு மருத்துவக்கல்லிரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரை அரசு மருத்துவக்கல்லிரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சமஸ்கிருதம் சர்ச்சை விவகாரம் தொடர்பாக, நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தை ஏற்று மீண்டும் ரத்தினவேல் டீனாக நியமிக்கப்படுகிறார் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்..  மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்: கோடை காலத்தை சமாளிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »