Press "Enter" to skip to content

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு நிறைவு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் விண்மீன் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியிடப்பட்டது. ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் க்ளிம்ஸ் காணொளி வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »