ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. மெல்போர்ன் நகர் ரோட் லேவர் அரங்கத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி – 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி சொந்த மண்ணில் விளையாடியதால் அவருக்கு கூடுதல் பலமாக கருதப்பட்டது. ஆனால் சோபியா கெனின் அவரை திணறடித்தார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சோபியா கெனின் 7(8) – 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் கெனின் கையே ஓங்கியது. இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி நேர்செட்டில் ஆஷ்லேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் – ஸ்பெயினைச் சேர்ந்த முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தின.
முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் தரநிலை பெறாத முகுருசா 7(10) – 6(8) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் முகுருசா.
நளைமறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின் – முகுருசா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Related Tags :
Source: Maalaimalar