கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
பெங்களூரு:
ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும், பெண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் தலைவிரித்தாடுகிறது.
கொரோனா அச்சம் ஒரு பக்கம் கலங்கடித்தாலும், இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை. பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவாமல் தடுக்க இங்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் உரிய அங்கீகார அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தையும், பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இவ்விரு ஆட்டங்களும் ஜூலை 25-ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar