கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் சீசன் 2020 காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அணிகளிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் முதல் வாரத்திலேயே ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளிடம் தெரிவித்து விட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘ஆம், பிசிசிஐ எங்களிடம், ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக கூறியது. மேலும், தற்போதுள்ள சூழ்நிலை சகஜ நிலைக்கு வந்த பின்னர் போட்டிக்கான காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தது’’ என்று ஐபிஎல் அணியின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் பிடிஐ தெரிவித்துள்ளது.
ஒருவேளை அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கடெ் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டியை நடத்த வாய்புள்ளது.
Related Tags :
Source: Maalaimalar