Press "Enter" to skip to content

சச்சின், டோனி, விராட் கோலியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: தம்பிக்கு கம்ரன் அக்மல் அறிவுரை

விராட் கோலி எப்படி நம்பர் ஒன் வீரராக மாறினார், சச்சின் தெண்டுல்கர் சர்ச்சையில் இருந்து எப்படி தப்பினார் என்பது பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் ஊழல் குற்றசாட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.

இவரது அண்ணன் கம்ரன் அக்மலும் கிரிக்கெட் வீரர்தான். தம்பியின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ள கம்ரன் அக்மல், இந்திய வீரர்களான விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் டோனியிடம் இருந்து உமர் அக்மலுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறுகையில் ‘‘உமர் அக்மலுக்கு எனது அறிவுரை எல்லாம் இந்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவன் தவறு செய்திருந்தால், கட்டாயம் மற்றவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவன் இன்னும் இளமையான வீரர்தான். வாழ்க்கையில் ஏராளமான கவனச்சிதறல்கள் உள்ளன.

ஆனால் விராட் கோலி சொல்வதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஐபிஎல் தொடக்க காலத்தில் விராட் கோலி முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அதன்பின் அவருடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டார். அவர் எப்படி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறினார் என்பதை பார்க்க வேண்டும்.

தற்போது நம்முடைய பாபர் அசாம் உலகின் தலைசிறந்த மூன்று வீரர்களில் ஒருவராக உள்ளார். அதன்பின் எம்எஸ் டோனியை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர் அணியை எப்படி வழிநடத்தினார் என்றால் அது தெரியும். அப்புறம் சச்சின் தெண்டுல்கர் எப்போதுமே சர்ச்சையில் இருந்து விலகியே இருந்தார். அவர்கள் நமக்கு எப்போதுமே நமக்கு தலைசிறந்த உதாரணம்.

அவர்களை உற்று நோக்கி, பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியே ரசிகர்களிடமம் அவர்களுடைய பழக்கவழக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் விளையாட்டுக்கு தலைசிறந்த தூதராக உள்ளார். அவர்களுடைய உதாரணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »