Press "Enter" to skip to content

விராட் சிறந்த வீரர்களில் ஒருவர்: அவரைப்போல் சிறந்த வீரராக முயற்சிப்பேன்: பாபர் அசாம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று வளர முயற்சி செய்வேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம். இவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.

தொடர்ச்சியாக இதுபோன்று விளையாடினால் விராட் கோலியை போன்ற சிறந்த வீரராக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். நான் அவருக்கு பின்னால்தான் இருக்கிறேன். நான் இன்னும் அதிகமான சாதனைகளை எட்ட வேண்டியுள்ளது. அவரை போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன். பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து சாதனைப் படைக்க வேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »