தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார்.
மும்பை:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ஓட்டத்தை குவித்தும் தோல்வியை தழுவியது. 224 ஓட்டத்தை இலக்கை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல்.லில் புதிய சாதனை படைத்தது.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சுமித், சஞ்சு சாம்சன், திவேதியா ஆகியோரது மட்டையாட்டம் அபாரமாக இருந்தது. பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். அமைதியாக ஆடி பிறகு அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீரர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. இதேபோல சுழற்பந்து வீரர் முருகன் அஸ்வினையும் சரியாக பயன்படுத்தவில்லை. இது அதிர்ச்சி அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
முருகன் அஸ்வின் இந்த ஆட்டத்தில் 1.3 சுற்றுகள் வீசி 16 ஓட்டங்கள் கொடுத்து 1 மட்டையிலக்குடை கைப்பற்றினார்.
Related Tags :
Source: Maalaimalar