கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு மெய்டன் சுற்றுகள் வீசி ஆர்சிபி பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனைப் படைத்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் சுற்றுகள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
இந்த ஆட்டத்தில் நான்கு சுற்றுகள் வீசிய சிராஜ் மூன்று மட்டையிலக்குடுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதில், இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதன்மூலம் ஒரே ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர் வீசிய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ்.
கொல்கத்தா பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா மற்றும் டாம் பாண்டனை அவுட் செய்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar