தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா தொடர் ஒத்திவைப்பு
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட சோதனை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான சோதனை தொடருக்காக தயாராகி வருகின்றன. அதேவேளையில் ஆஸ்திரேலியா சோதனை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாட இருந்தது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐசிசி-யின் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar