கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மும்பை:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனை முடிவில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அதே போல் சச்சின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
[embedded content]
Source: Maalaimalar