முதல் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 10 ரன்னிலும், ஆர்சிபிக்கு எதிராக 38 ரன்களும், நேற்று சிஎஸ்கே அணிக்கெதிராக 18 ரன்னிலும் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணியின் தோல்விக்கு மோர்கனை விமர்சனம் செய்துள்ளார் வீரேந்தர் சேவாக்.
மோர்கன் குறித்து வீரேந்தர் சேவாக் கூறுகையில் ‘‘உலகில் டி20 கிரிக்கெட் அணிக்கான சிறந்த கேப்டன் மோர்கன் என நான் நினைக்கவில்லை. யார் சிறப்பாக மட்டையாட்டம் செய்து அணியை வெற்றி பெற வைத்தால், அந்த வெற்றி அவருக்காக. யார் சிறப்பாக பந்து வீசினாலும், அந்த வெற்றி இங்கிலாந்துக்காக. ஆனால், ஐபிஎல் போட்டியில் அவர் அந்த அணியை பெறவில்லை. மேலும், அவர் சிறந்த கேப்டன் என நான் நினைக்கவில்லை’’ என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar