பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி மட்டையிலக்குடுகளை பறிகொடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் 19 ஓட்டத்தை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே வெளியேறினார். இவரது மட்டையிலக்குடை ஷிவம் மாவி வீழ்த்தினார்.
அதன்பின் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச, கிறிஸ் ஜோர்டான் 18 பந்தில் 30 ஓட்டங்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 123 ஓட்டங்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 31 ஓட்டங்கள் சேர்த்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 2 மட்டையிலக்குடும், பிரசித் கிருஷ்ணா 3 மட்டையிலக்குடும், சுனில் நரைன் 2 மட்டையிலக்குடும், வருண் சக்ரவர்த்தி 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினார். சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் 8 ஓவர்களில் 46 ரன்களே விட்டுக்கொடுத்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar