Press "Enter" to skip to content

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி – முன்னாள் தடகள வீரருக்கு தீவிர சிகிச்சை

மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

சண்டிகர்:

இந்தியாவில் முன்னாள் தடகள வீரர் மில்காசிங். 91 வயதான அவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டார்.

ஆனால் பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த மே மாத இறுதியில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மில்கா சிங்குக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்தது. உடனே அவரை சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுரும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.

1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார். அவருக்கு 1959-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »