Press "Enter" to skip to content

ஒரு பந்து கூட வீசப்படாமல் 4-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முதல் நாள் ஆட்டமும், இன்றைய 4-வது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 சுற்றில் 217 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. நியூசிலாந்து 49 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால், இன்றைய ஆட்டமும் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனால் இன்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »