Press "Enter" to skip to content

குஜராத் அணியுடன் மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாட்டம்

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

புனே:

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9- வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஜடேஜா தலைமையிலான சென்னை அணி 6-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்சை இன்று சந்திக்கிறது. புனேயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற புனே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அவர்களின் முயற்சியை முறியடித்து சென்னை அணி 2வது வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »