Press "Enter" to skip to content

நோபால் சர்ச்சை: 3-வது நடுவர் தலையிட்டு இருக்க வேண்டும்- டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்ட் அதிருப்தி

நடுவரின் முடிவு சரியோ அல்லது தவறோ அதை ஏற்க வேண்டும் என டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணி டெல்லியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 222 ஓட்டத்தை குவித்தது.

தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்தார். இந்த தொடரில் அவர் 3 வது செஞ்சூரி அடித்து முத்திரை பதித்தார். பட்லர் 65 பந்தில் 116 ரன்னும் (9 பவுண்டரி, 9 சிக்சர்), படிக்கல் 35 பந்தில் 54 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 207 ஓட்டத்தை எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 15 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் ரி‌ஷப் பண்ட் 24 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி , 2 சிக்சர்), லலித் யாதவ் 24 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ராவ்மேன் போவெல் 15 பந்தில் 36 ரன்னும் (5 சிக்சர்) எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 3 மட்டையிலக்குடும், அஸ்வின் 2 மட்டையிலக்குடும், சாஹல், மெக்காய் தலா 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

டெல்லி அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடைசி சுற்றில் 36 ஓட்டத்தை தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்தில் போவெல் 3 சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் 3-வது பந்து இடுப்பு உயரம் அளவுக்கு வீசப்பட்டதாகவும், இதற்கு நோபால் கொடுக்க வேண்டும் என்றும் டெல்லி அணியினர் முறையிட்டனர்.

இதற்கு ஆடுகள நடுவர் நோபால் கொடுக்க மறுத்தார். இதனால் மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் விரக்தி அடைந்தார். தனது பேட்ஸ்மேன்களை ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு சைகை செய்ததால் பரபரப்பு நிலவியது.

டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் அமரேயை களத்துக்கு அனுப்பினார். 3-வது நடுவரின் முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஆடுகள நடுவர் நிராகரித்தார். இது தவிர பவுண்டரி லைனில் இருந்த பட்லர், ரி‌ஷப்பண்ட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது.

பின்னர் எஞ்சிய 3 பந்துகளில் டெல்லி அணியால் 2 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 15 ஓட்டத்தில் தோற்றது.

நோபால் கொடுக்கப்பட்டதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் இறுதியில் போவெல் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். நோபால் எங்களுக்கு விலை மதிப்பற்றதாக இருந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

நோபால் கொடுக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அனைவருக்கும் நோபால் என்று தெரிந்தது. இதில் 3-வது நடுவர் தலையிட்டு அது நோபால் என்று கூறி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் நான் விதியை மாற்ற முடியாது. எனது குழுவை களத்திற்கு அனுப்பியது வெளிப்படையாக சரியானது இல்லை. அது பதற்றமான நேரமாகும். இது இரு தரப்பினரின் தவறு என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் இலக்கை நெருங்கி வந்ததால்தான் இந்த முடிவு கொஞ்சம் வலிக்கிறது. எங்களது பவுலர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும்.

இவ்வாறு ரி‌ஷப்பண்ட் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, “நடுவரின் முடிவு சரியோ அல்லது தவறோ அதை ஏற்க வேண்டும்” என்றார்.

டெல்லி அணி 4-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8-வது போட்டியில் கொல்கத்தாவை 28-ந் தேதி சந்திக்கிறது. ராஜஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை 26-ந் தேதி எதிர்கொள்கிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »