Press "Enter" to skip to content

அம்பதி ராயுடு போராட்டம் வீணானது – 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப் அணி 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். பனுகா ராஜபக்சே 42 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா ஒரு ஓட்டத்தில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாண்ட்னர் 8 ரன்னும், ஷிவம் டுபே 9 ஓட்டத்தில் அவுட்டாகினர். 40 ஓட்டத்தை எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்தது.

ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் அம்பதி ராயுடு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு கெய்க்வாட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது மட்டையிலக்குடுக்கு 49 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 30 ஓட்டத்தில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஜடேஜா, ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ராயுடு அதிரடியில் இறங்கினார். கடைசி 5 சுற்றில் 70 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

16-வது சுற்றில் ராயுடு 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 23 ஓட்டத்தை கிடைத்தது. 17வது சுற்றில் 6 ஓட்டத்தை கிடைத்தது. 18வது சுற்றில் 6 ஓட்டத்தை எடுத்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு 39 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19வது சுற்றில் 8 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. 

இதனால் கடைசி சுற்றில் சென்னை வெற்றி பெற 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதியில், சென்னை அணி 176 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »