Press "Enter" to skip to content

ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புனே:

15-வது ஐ.பி.எல். 20 சுற்றிப் போட்டியில் 32-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இதனால் 6-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணி வீரர்கள் விபரம்:-

டு பிலிசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(வ), ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்

ராஜஸ்தான் அணி வீரர்கள் விபரம்:-

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »